வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2017 12:11
மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர். இதற்கு அறநிலையத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, வனபத்ரகாளியம்மன் கோவில் முன்பு, 3.40 கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கி முழு வீச்சில் நடைபெறுகின்றன. கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில்,” ராஜகோபுரம் கட்டும் பணியில் பேஸ் மட்டம் முடிந்த விட்டது. 24 அடி உயர கல்காரப்பணிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராசிபுரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து வடிவமைக்கப்பட்ட கற்கள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டுள்ளது, கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது, ” என்றார்.