Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சோதனையை சாதனையாக்குவோம்: கிறிஸ்துமஸ் கால சிந்தனை-1 சோதனையை சாதனையாக்குவோம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப தரிசனத்திற்கு 17 மணி நேரம் காத்திருப்பு : பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 டிச
2011
10:12

சபரிமலை : மண்டல பூஜை ஐயப்ப தரிசனத்திற்காக, சபரிமலையில் பக்தர்கள், 17 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. 12ம் தேதி இரவு, பம்பையில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், 17 மணிநேரம் காத்திருந்த பின்னரே, சுவாமியை தரிசிக்க முடிந்தது. இரவு, பகல் என உண்ணாமல், உறங்காமல் மலையில் காத்து கிடந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததை ஒட்டி, பம்பையில் இருந்து சன்னிதானம் வரை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வரிசை நீண்டு கொண்டே போனதால், பம்பையில் பக்தர்கள் பல மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிரசாதம் வழங்குவதில் சிக்கல்: முக்கிய பிரசாதங்களான, அரவணை, அப்பம் போன்றவற்றை பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கு வசதியாக, திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சிறப்பு கவுன்டர்களை திறந்துள்ளது. அங்கு, நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்க்க, தனலட்சுமி வங்கிக் கிளைகள் எங்கிருந்தாலும், அங்கிருந்து தேவையான பிரசாதங்களுக்கு முன்கூட்டியே பணத்தை செலுத்தி, கூப்பன் பெற்றுக் கொள்ளலாம். அதை, சபரிமலையில் செயல்படும் ப்ரீபெய்டு பிரசாத கவுன்டர்களில் கொடுத்து, பிரசாதங்களை பெறும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், கூப்பன்களில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப, பிரசாதங்கள் வழங்குவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெரிசல் காரணமாக, அங்கு பக்தர்கள் வங்கி கூப்பனை கொடுத்து, பிரசாதங்களை எண்ணி வாங்க முடியாத நிலையால், இப்பிரச்னை ஏற்படுகிறது. இதனால், அங்குள்ள ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்யும் நிலையும் உள்ளது. "அரவணை பிரசாதம் எண்ணிக்கையில் தவறு ஏற்படுவதை தடுக்க, டின்களை எண்ணும் கருவியைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிரமம் பாராமல், பக்தர்கள் அந்தந்த கவுன்டர்களிலேயே, பிரசாத டின்கள் சரியாக உள்ளதா, என எண்ணி பார்த்து வாங்கவேண்டும் என, வங்கி அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar