Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்ப தரிசனத்திற்கு 17 மணி நேரம் ... முதுமலையில் கஜமேளா : அலங்காரத்துடன் 37 யானைகள் பங்கேற்பு! முதுமலையில் கஜமேளா : அலங்காரத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோதனையை சாதனையாக்குவோம்: கிறிஸ்துமஸ் கால சிந்தனை-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 டிச
2011
10:12

அன்பு மற்றும் அமைதியை ஆயுதமாகக் கொண்டு அனைவரிடத்திலும் நட்புணர்வு, நல்லெண்ணங்களை நிலைநிறுத்த வேண்டுமென்பதே, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக அமைந் துள்ளது புனித செபஸ்தியாரின் வாழ்க்கை. இளம் வயதில், போர்ப்படை தளபதியாக பொறுப்பேற்று ரோமாபுரியை பாதுகாத்த செபஸ்தியார், ஓய்வு நேரத்தை மறைபரப்பும் பணிக்காக செலவிட்டார். சிறைக்கைதிகளை சந்தித்து அவர்களைத் தழுவி, ""விடுதலைக்காற்றை நீங்கள் சுவாசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை, என்று கூறி ஆறுதல் அளிப்பார். இவரது பரிவினால் நெகிழ்ந்து போன கைதிகள், இயேசு கிறிஸ்துவை வாழ்த்திப்பாடி பொழுதை கழித்தனர். இதை கேள்விப்பட்டான் பேரரசன் தியோக்கிளேசியன். கிறிஸ்தவர்களை வேரோடு வெட்டி சாய்த்துக்கொண்டிருந்த அவனுக்கு, தனது தளபதி, அவர்களை சார்ந்தவர் என்பது வேப்பங்காயாக கசந்தது. செபஸ்தியார் தளபதியாக இருந்து தனக்கு செய்த சேவைகளை மறந்தான். அவருக்கு மரணதண்டனை விதித்து, தனது கண்முன் நிறைவேற்றுமாறு ஆணையிட்டான்.

வேதசாட்சியாக உயிர்நீக்கப்போவதை நினைத்து அவர் ஆனந்தமடைந்தார். அரண்மனை தூண்களில் பிணைக்கப்பட்ட செபஸ்தியாரின் உடல்மீது அம்புகள் எய்யப்பட்டன. குற்றுயிராய் கிடந்த அவரை மீட்ட பணிப்பெண், அவரது காயங்களுக்கு மருந்திட்டு காப்பாற்றினாள். மீண்டும் மன்னரை சந்தித்த செபஸ்தியார், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமாறு மன்றாடினார். இறந்துவிட்டதாக நினைத்த தளபதி, மீண்டும் உயிருடன் வந்ததோடு தனக்கு உபதேசமும் அளித்தது கண்டு வெகுண்ட மன்னன், தடியால் அடித்து அவரைக் கொன்றான். பிரான்சில் பிறந்து, இத்தாலியில் வளர்ந்து, சோதனைகளை சாதனையாக்கி, இயேசுவுக்காக உயிர் துறந்த செபஸ்தியார், புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்தார். துயரத்தில் துடிப்பவர்களுக்கு துணை நிற்பவராகவும், போர்ப்படை வீரர்களின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். ஏழை, எளியவர், கைவிடப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சமுதாயத்தில் தாழ்நிலைக்கு தள்ளப்பட்டோர் இவர்களுக்கு உதவாத எந்த இதயமும், இயேசுவுக்கு ஏற்புடையதல்ல என்பதை மனதில் கொண்டு, ""இறைவா, நான் தன்னலம் துறக்கவும், ஆன்மாவின் குரலுக்கு செவிமடுக்கவும் அருள்தாரும், என இறைஞ்சுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar