காஞ்சிபுரம், தீபப்ரகாசர் கோயிலில் திருமால் ஜோதி வடிவாக இருக்கிறார். பிரம்மாயாகம் செய்தபோது, மஹாவிஷ்ணு ஜோதி வடிவாக விளங்கியதால், பெருமாளுக்கு தீபப்ரகாசர் மற்றும் விளக்கொளிப் பெருமாள் என்று பெயர். திருக்கார்த்திகையன்று வைணவர்கள் தீபம் ஏற்றி பெருமாளை வழிபடுகிறார்கள். இதற்குப் பெருமாள் கார்த்திகை என்று பெயர்.