பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை, வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக, 5ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம், விசேஷ சந்தி, யாகபூஜை ஹோமம், தீபாராதனையும், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, யாக பூஜை, ஹோமம், யாத்ரா தானம், கலச புறப்பாடு நடந்தது.அதை தொடர்ந்து, கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.