Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமனை எவ்வாறு வழிபட வேண்டும்? அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்? அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம்
எழுத்தின் அளவு:
அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம்

பதிவு செய்த நாள்

14 டிச
2017
05:12

அனுமன் பெருமை: சுந்தரகாண்டம் படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் அதை காண்டங்களாகப் பிரித்தார். அப்போது அவருக்கு ராமாயணத்தில் அரும்பெரும் செயல்கள் புரிந்த அனுமனுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது. எனவே ஏழுக்காண்டங்களுள் ஒன்றினை அனுமனின் பெயரால் சுந்தர காண்டம் என்று அமைத்து மகிழ்ந்தார். அனுமன் சொல்லின் செல்வன் என்பதற்கு எடுத்துக்காட்டாக சில காட்சி வசனங்களை அமைத்தார் கம்பர். அனுமன் முதன் முதலில் ராமனை சந்தித்த போது ராமபிரான் அவரிடம் நீ யார்? என்று கேட்டார்.

ராமனின் வினாவுக்கு, காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்று தன்பெயருக்கு தன் பெற்றோர் யார் என்பதையும் சேர்த்து அடக்கமாக கூறினார். அனுமன் சீதையை தேடி இலங்கைக்குச் சென்றபோது அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதைக் கண்டார். ஒரு நொடி தாமதித்தாலும் சீதை உயிர் நீத்துவிடுவாள் எனும் நிலை. அவளை என்ன சொல்லித் தடுப்பது? சட்டென்று ஜெய் ஸ்ரீராம் என்று சீதை காதுபட உரக்கக் கூறினார். ராம நாமம் கேட்பதும் அப்படியே நின்றாள் சீதை.

சீதா தேவியிடம் தாயே! நான் ராமபக்தன் என் பிரபு ஸ்ரீராமன் தங்களை விரைவில் சிறை மீட்டுச் செல்வார்....! என்றும் ஆறுதல் சொல்லி தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார். இலங்கையில் இருந்து திரும்பி வந்த அனுமன், ராமபிரானிடம், கண்டனென் கற்பினும் கணியை கண்களால் என்று ஒரே வரியில் சிதையைக் கண்டதையும் அவர் கற்புக்கரசியாக திகழ்வதையும் கூறினார். வால்மீகியும், கம்பனும் மட்டுமல்ல; இன்றும் கூட ராமாயணத்தினை யார், எந்த மொழியில் எழுதினாலும் எல்லோராலும் போற்றப்படுவராக இருப்பதே அனுமனின் பெருமை எனலாம்.

சிரமம் நீக்கும் சுந்தரகாண்டம்: இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்; மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம். ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால், கோடிக்கணக்கில் உள்ள ஸ்லோகங்களைப் படித்து ராமாயணத்தை அறிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த வால்மீகி முனிவர் அதை இருபத்துநான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட சிறு காவியமாக உருவாக்கினார். இந்த பாரத நாடெங்கும் வால்மீகி ராமாயணத்துக்கு, எல்லையில்லாத பெருமையும் மதிப்பும் இருந்து வருகிறது. வேறு எந்தவொரு காவியத்துக்கும் இத்தனை பெருமை இருந்ததில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூரில் வள்ளலார் நிறுவிய ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar