ராமேஸ்வரம்: டிச.,16ல் மார்கழி மாதம் துவங்குவதால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை நடை திறந்து, பூஜை நேரம் மாற்றப்பட்டு உள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். இதுகுறித்து கோயில் இணை ஆணையர் மங்ைகயர்க்கரசி வெளியிட்ட அறிக்கையில்: டிச.,16ல் மார்கழி மாதம் துவங்குவதால், அன்று முதல் ஜன.15 (31 நாள்) வரை கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ராமநாதசுவாமி சன்னதியில் காலை 4:00 முதல் 5:00மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். இதன் பிறகு வழக்கம் போல் காலசந்தி பூஜை(காலை), உச்சிகால பூஜை(மதியம்), சாயரக் சை பூஜை(மாலை) நடக்கும். மேலும் இரவு 8:00 மணிக்கு கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும், இரவு 8:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் ,என தெரிவித்தார்.