Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திய வம்சாவளி பெண் சிதம்பரத்தில் ... திருமலையில் நாளை முதல் திருப்பாவை ஒலிக்கும்! திருமலையில் நாளை முதல் திருப்பாவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி மூலவரை அருகில் தரிசிக்கும் நடைமுறை ரத்து செய்ய தேவஸ்தானம் ஆலோசனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2011
11:12

நகரி : திருப்பதியில் மூலவர் வெங்கடேசபெருமாளை அருகிலிருந்து தரிசிக்கும் நடைமுறையை ரத்து செய்ய, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தற்போது வாரநாட்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை பக்தர்கள், மூலவரை மூன்றாவது வாயிற்படி அருகிலிருந்து தரிசிக்கும் நடைமுறைக்கு (லகு தரிசனம்) அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அருகிலிருந்து தரிசிக்கும் நடைமுறை மூலம் நாள் ஒன்றுக்கு, 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்யமுடிகிறது. இந்த இரு நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து விடுவதால், செவ்வாய், புதன்கிழமைகளில் சில நேரங்களில் பக்தர் கூட்டத்திற்கு தகுந்தபடி இரவு நேரத்தில் தொலைதூர (மகாலகு) தரிசனம் அமல்படுத்தப்படுகிறது, இதுபோன்ற நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்று செல்லும் பக்தர்கள், நான்கு முதல், ஆறு மணி நேரம் வரையும், இலவச கியூவில் செல்லும் பக்தர்களும் தரிசனத்திற்காக, பன்னிரண்டு முதல், பதினைந்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. மூலவரை அருகிலிருந்து தரிசனம் செய்யும் நடைமுறையை ரத்து செய்து விட்டால், கியூ வரிசையில் நீண்டநேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு, துரித நேரத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆலோசனையின் பேரில் இந்த நடைமுறையை தற்போது செவ்வாய்கிழமை அன்று பகல் நேரத்தில் இரண்டு மணி நேரமும், புதன்கிழமைகளில் காலை, 11 மணி வரை மட்டுமே முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை திடீரென ரத்து செய்து விடாமல், இதற்கான நேரத்தை படிப்படியாக குறைத்து முற்றிலுமாக ரத்து செய்து விட தேவஸ்தான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், 5 ம் நாள் நிகழ்வாக யானை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar