Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருச்செந்தூர் கோயில் யானைகள் ... கொட்டாரம் ராமர் கோயிலில் அனுமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் யாகசாலை நாட்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2011
11:12

கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை நாட்கால் நடும் விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் தொடர்ந்து வருஷாபிஷேகம் நடந்து வந்ததை தொடர்ந்து கடந்த 1999ம் ஆண்டு ஆண்டு திருப்பணி வேலைகள் துவக்கப்பட்டு அருள்மிகு பூவனநாதசாமி சன்னதி முன்பு ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் மற்றும் செண்பகவல்லி அம்மன் சன்னதி முன்பு 21 அடி உயரம் உடைய சாலஹார கோபுரம் அமைக்கப்பட்டு மற்றும் பல திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் முன்பு 70 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட யாகசாலை அமைப்பதற்காக நாட்கால் நடும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜையும் தொடர்ந்து, கணபதி ஹோமம், கணபதி பூஜை மற்றும் லலிதா சகஸ்ரநாம யாகமும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதனை தொடர்ந்து யாகசாலை பந்தல் அமைக்க நாட்கால் நாட்டப்பட்டது. விழாவில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, கோயில் உதவி ஆணையர் வீரராஜன், நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள், திருப்பணி குழு தலைவர் நாகஜோதி, உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, கருப்பசாமி, சீனிவாசன், மாரியப்பன், முத்தையா, வேலுச்சாமி, ஜெயராமன், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் டிரஸ்ட் தலைவர் காளிராஜன், யாகசாலை உபயதாரர் சம்பத் கமலாமாரியம்மாள், கம்மவார் சங்க செயலாளர் பால்ராஜ், நாடார் உறவின்முறை சங்க தாழையப்பன், விக்னேஸ்வரன், கோயில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar