Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துார் வீர ஆஞ்சநேயர் ... மார்கழி அமாவாசை ராமேஸ்வரத்தில் நீராடிய பக்தர்கள் மார்கழி அமாவாசை ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

18 டிச
2017
03:12

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடை மாலை, வெண்ணெய் சாற்றி தரிசனம் செய்தனர். மார்கழி மூல நட்சத்திரம், அமாவாசை தினத்தில் அனுமன் பிறந்தார். அவரது பிறந்த தினமான நேற்று அனுமன் கோயில்களில் அனுமனுக்கு வடை மாலை, வெண்ணெய் சாற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அரண்மனை பால ஆஞ்சநேயர் கோயிலில், காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 10:30 மணிக்கு தீபாராதனை, 11:௦௦ மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இரு தினங்களில் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளதால், சனியின் பார்வையில் சிக்கும் ராசிக்காரர்கள் அனுமனை வழிபட்டால், சனி பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்பதால், அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அர்ச்சகர் ராமகிருஷ்ணன், சுவாமி அலங்காரம்,, அபிேஷகத்தினை நடத்தினார். சேதுக்கரைசேதுபந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பக்தர்கள் வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபட்டனர். பட்டினம்காத்தான் கடற்கரை சாலையில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர், திருப்புல்லாணி, தேவிபட்டினம், மண்டபம்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர், பரமக்குடி, உட்பட அனைத்துப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு அபிேஷகம் தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar