Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்கள் தங்கும் ... சபரிமலையில் மண்டலபூஜையன்று தரிசன நேர மாற்றம் இல்லை சபரிமலையில் மண்டலபூஜையன்று தரிசன ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
புது வடிவத்தில் தயாராகிறது திருவாபரண பவனி பல்லக்கு
எழுத்தின் அளவு:
புது வடிவத்தில் தயாராகிறது திருவாபரண பவனி பல்லக்கு

பதிவு செய்த நாள்

18 டிச
2017
04:12

சபரிமலை: பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் திருவாபரண பவனியில், மன்னர் பிரதிநிதியை சுமந்து செல்லும் பல்லக்கு புது வடிவத்தில் தயாராகிறது. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம், பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். பந்தளம் அரண் மனையில் வளர்ந்த ஐயப்பனை காண, அவரது தந்தை ஆபரணங்களுடன் வருவதாக ஐதீகம். ஆண்டுதோறும் ஜன., 12ல் திருவாபரண பவனி பந்தளத்தில் இருந்து புறப்படும். இந்த பவனியில் பந்தளம் மன்னர் பிரநிதி வருவார். அவரை பல்லக்கில் பக்தர்கள் துாக்கி வருவர். இந்த பல்லக்குக்கு தற்போது புதிய வடிவம் கொடுக்கப்படுகிறது. திருவாபரணம், பந்தளம் மன்னர் குடும்பம், அரண்மனை ஆகியவற்றை விளக்கும் படங்கள் பல்லக்கில் வரையப்பட்டுள்ளன. குளநடையை சேர்ந்த ஓவியர் ராஜு இதை வடிவமைத்துள்ளார்.இந்த ஆண்டுக்கான, பந்தளம் மன்னர் பிரதிநிதி அடுத்த வாரம் தேர்வு செய்யப்பட உள்ளார். தேர்வு செய்யப்படுபவர் தினமும், பந்தளம் சாஸ்தா கோயிலில் ஆபரணம் இருக்கும் அரண்மனை முன் அமர்ந்து பக்தர்களுக்கு திருநீறு கொடுத்து ஆசி வழங்குவார்.திருவாபரண பவனி ஜன., 12-ல் புறப்படுகிறது. மகரவிளக்கு முடிந்து அடுத்த நாள் முதல் மாளிகைப்புறம் கோயிலில் நடக்கும் சடங்குகளுக்கும், ஜன.,19- ல் மாளிகைப்புறம் கோயிலில் நடக்கும் குருதிபூஜைக்கும் மன்னர் பிரதிநிதி தலைமை வகிப்பார். ஜன.,20- காலையில் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் அவருக்கு மட்டுமே தரிசனம் உண்டு.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar