சபரிமலையில் மண்டலபூஜையன்று தரிசன நேர மாற்றம் இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2017 10:12
சபரிமலை: மண்டலபூஜை நாளில் பக்தர்கள் தரிசன நேரத்தில் மாறுதல் இருக்காது என்று தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன் கூறினார்.சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை சடங்குகள் 10:15 மணிக்கு தொடங்குகிறது. 11:04 முதல் 11:40க்கு இடைபட்ட நேரத்தில் கும்பராசியில் மண்டலபூஜை நடைபெறும் என்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அறிவித்து உள்ளார். இதனால் பக்தர்கள் தரிசன நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன் கூறினார்.மண்டலபூஜை முடிந்த பின்னர் பகல் ஒரு மணி வரையிலும், மாலையில் 3:30 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். எனினும் 26-ம் தேதி காலை 9:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் நெய்யபிஷேகம் 31ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கும்.