Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் ... பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் மண்டல பூஜை பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி பகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2017
11:12

காரைக்கால்: விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இன்று சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி  நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலையில் சனி பகவான் இடம் பெயர்ந்ததும் லட்சக்கனக்கானோர் இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடினர்.

Default Image
Next News

திருநள்ளாறில் பிரசித்த பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகாவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரிசித்தி பெற்றது. இந்த ஆண்டு கண்ணி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். இவ்விழா இன்று காலை சரியாக 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி  நடைபெற்றது. முன்னதாக அதிகாலை4 மணி முதல் சனி பகவானுக்கு பால், நல்லலெண்ணை, பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடந்து வந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோஷம் முழங்க சனி பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு சனி பகவானை தரிசிக்க நேற்று இரவு முதல் பொதுமக்கள் வரத்துவங்கினர். அதிகாலை வரை கூட்டம் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சரியாக காலை 9:59 மணிக்கு தீபாரணை நடந்தது.

மார்கழி மாதத்தில் கடும் பனி நிலவி வரும் நிலையில் சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்று சனி பகாவானை தரிசிக்க வந்த பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளோடு தரிசனத்திற்கு வந்தனர்.சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வந்த பக்கதர்கள் முன்னதாக நள குளத்தில் நல்லெண்ணெய் தேர்த்து நீராடி தங்களது பழைய ஆடைகளை குளத்தில் விட்டு சென்றனர். நேற்று அதிகாலை முதலே சுமார் 2 லட்சம் பக்தர்கள் குளத்தில் நீராடியதால் அப்பகுதியே பக்தர்கள் வெள்ளத்தால் மூழ்கியது. திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே வாகனங்களில் வரத்துவங்கினர் இதனால் அப்பகுதியில் எல்லையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு நடத்தே சென்று சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar