Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டலபூஜையன்று தரிசன ... சபரிமலை ‘ரோப்வே’ வருவதில் தொடரும் சிக்கல் சபரிமலை ‘ரோப்வே’ வருவதில் தொடரும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் உச்சபூஜை: தங்க அங்கி நாளை புறப்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலை சன்னிதானத்தில் உச்சபூஜை: தங்க அங்கி நாளை புறப்பாடு

பதிவு செய்த நாள்

21 டிச
2017
11:12

சபரிமலை: சபரிமலையில் சபரிமலை சன்னிதானத்தில் நேற்று உச்சபூஜைக்கு முன்னோடியாக 18 படிகளில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வழிபாடு செய்தார்.

சபரிமலையில் 26ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலபூஜை 26ம் தேதி நடை பெறுகிறது. அன்று மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

3 நாட்கள் நடை அடைப்பு : நாளை காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 23-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும்,24-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும்தங்கும் இந்த பவனி 25-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும்.

பம்பை கணபதி கோயிலில் தரிசனத்துக்காக வைக்கப்படும். மாலை மூன்று மணிக்கு தலைச் சுமையாக சன்னிதானத்துக்குகொண்டு வரப்படும்.25ம் மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26ம் தேதி மண்டலபூஜைநேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 26 இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது.31ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய் அபிஷேகம் நடைபெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று மீண்டும் பக்தர் கூட்டம் அதிகரித்ததால், 5,000 பேருக்கு மட்டுமே ‘ஸ்பாட் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆன்லைன் முன்பதிவு அல்லது ஸ்பாட் புக்கிங் கூப்பன்கள் இல்லாமல் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பம்பையில் ஆடைகளை விட்டுச்செல்லும் கலாசாரம் ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து, ‘ஸ்பாட் புக்கிங்’ எண்ணிக்கையை அதிகரிக்க, ... மேலும்
 
temple news
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கம்பமெட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar