Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: ... தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

22 டிச
2017
06:12

தஞ்சாவூர்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14வது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது.

இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருடபகவான் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டும் உற்சவராக வீதியுலா வருவது பிரசித்திபெற்றது. முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.  முன்னதாக பெருமாள் தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன்பாக எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டன.  விழா நாட்களில் தினசரி காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது.

நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து கருடபகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் காட்சியளிப்பார் என்பதால் கருடசேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்வது சிறப்பு. 9ம் நாள் விழாவாக வருகிற 30ம் தேதி தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் ... மேலும்
 
temple news
செங்கை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன்கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த பவுர்ணமி யாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar