Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூரில் பரமபத வாசலில் ... நெட்டப்பாக்கம் வெங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு:கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2017
12:12

உடுமலை: கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், கோவிந்தா என
பக்தர்கள் கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கான சிறப்பு மாதமாக, அதிகாலை பூஜைகளுடன், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இம்மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாகவும், இந்நாளில், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

டிச 29-லச, வைகுண்ட ஏகாதசியையொட்டி, உடுமலை, பெருமாள் கோவில்களில், அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுந்த தமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே, என்ற திருவாய்மொழிக்கேற்ப பக்தர்கள் பெருமா ளின் கடைக்கண் பார்வைக்கு காத்திருந்து, சொர்க்கவாசல் திறக்கும் சமயத்தில் கோவிந்தா கோஷம் எழுப்பி, வழிபட்டனர்.

பக்தர்கள், அனைவரும், சொர்க்க வாசல் வழியே நுழைந்து, பெருமாளை வணங்கிச் சென்றனர்.
பெரியகடை வீதி, நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பூமீநீளா நாயகி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.

பெரியபட்டி ஊராட்சி சீனிவாச அனுமந்த பெருமாள் கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு திருவீதி உலா மற்றும் சிறப்பு சொற் பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

நெல்லுக்கடை வீதி, சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு, பெருமா ளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை, 5:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பூமீநீளா நாயகி சவுந்திரவல்லித்தாயார் சமேத சவுந்திரராஜப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை, 11:30மணிக்கு, பெருமாள் திருவீதி உலா நடந்தது.

பிரசன்ன விநாயகர் கோவிலில், காலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, நவநீத கிருஷ்ணன் கோவிலில், ராப்பத்து உற்சவம் துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar