குருவித்துறையில் வைகுண்ட ஏகாதசி 8 ஆண்டுக்கு பின் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 02:12
குருவித்துறை : குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் ராஜகோபுரம் கட்டப்பட்டதை தொடர்ந்துஎட்டு ஆண்டுகளுக்கு பின்பு வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. சோழவந்தான் அருகேயுள்ள இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு டிச. 29-ல், காலை 5:45 மணிக்கு நடந்தது. கோயில் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
இதைதொடர்ந்து நேற்று காலை ராஜ அலங்காரத்தில் கருடாழ்வார் வாகனத்தில் ஊர்வலமாக கன்னியப்ப முதலியார் மண்டகப்படியில் சுவாமி எழுந்தருளினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சக்கரையம்மாள், ஊழியர்கள் வெங்கடேசன், நாகராஜ் மற்றும் கிராம விழா குழுவினர் செய்திருந்தனர்.
சோழவந்தான்: ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் டிச. 29-ல், காலை 5:00 மணிக்கு ரகுராம்பட்டர்தலைமையில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காலை 5:46 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருள பக்தர்கள் தரிசித்தனர். கோயில் நிர்வாக அதிகாரி லதா, கணக்கர் பூபதி, ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலஸ்தானத்தில் பவளக் கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால், வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள சொர்க்கவாசல் திறக் கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார்.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில்அதிகாலை மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமா தேவி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் நடந்தது. அதிகாலை5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் உற்சவர் பெருமாள் அருள் பாலித்தார். இரவு கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.திருநகர் மகாலட்சுமி காலனி பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சயன கோல அலங்காரமானது. இரவு 7:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி புறப்பாடு நடந்தது.
பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவருக்கு சயன கோல அலங்காரமும், மூலவர்கள் லட்சுமி நாராயணருக்கு புஷ்பாங்கி அலங்காரமானது.