கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அரியானை அந்தணர் தம் சிந்தையானைஅருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானைஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானைஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே!மற்றாரும் தன்னொப்பார் இல்லா தானைவானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்பெற்றானை பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.கருமானின் உரியதளே உடையா வீக்கிக்கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்திவருமானத் திரள்தோள்கள் மட்டித் தாடவளர்மதியம் சடைக்கணிந்து மானேர் நோக்கிஅருமான வாண்முகத்தாள் அமர்ந்து காணஅமரர்கணம் முடிவணங்க ஆடு கின்றபெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.அருந்தவர்களே தொழுதேத்தும் அப்பன் தன்னைஅமரர்கள்தம் பெருமானை அரனை மூவாமருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னைமறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்திருந்தொளிய தாரகையும் திசைகள் எட்டும்திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவும் மாயபெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்அருமருந்தை அகன்ஞாலத்து அகத்துள் தோன்றிவருந்துணையும் சுற்றமும் பற்றும்விட்டுவான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போகமாற்றிப்பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்கனவயிரக் குன்றனைய காட்சி யானைஅரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னைஅருமறையோடு ஆறங்கம் ஆயினானைச்சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்கபெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.வரும்பயனை எழுநரம்பின் ஓசையானைவரைசிலையா வானவர்கள் முயன்ற வாளிஅரும்பயம் செய் அவுணர் புரமெரியக் கோத்தஅம்மானை அலைகடல் நஞ்சயின்றான் தன்னைச்சுரும்ப மருங்குழல் மடவார் கடைக்கண்நோக்கில்துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.காரானை யீருரிவைப் போர்வை யானைக்காமருபூங் கச்சியே கம்பன் தன்னைஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னைஅமரர்களுக்கு அறிவரிய அளவிலானைப்பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்பேரானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.முற்றாத பால்மதியம் சூடி னானைமூவுலகும் தானாய முதல்வன் தன்னைத்செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்குற்றகுற்றாலத் தமர்ந்துறையும் குழகன் தன்னைக்கூத்தாட வல்லானைக் கோளை ஞானம்பெற்றாபெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.காரொளிய திருமேனிச் செங்கண் மாலும்கடிக்கமலத் திருந்தவனும் காணா வண்ணம்சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்திகழொளியைச் சிந்தைதன்னை மயக்கம் தீர்க்கும்ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்ஏழுலகும் கடந்தண்டத்து அப்பால் நின்றபேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.