Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டில் மாரியம்மனுக்கு ரூபாய் ... திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு வழிபாடு திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
12:01

பழநி, : முன்னிட்டு, பழநிமலைக் கோயிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநிமுருகன் கோயிலுக்கு தைப்பூசவிழா பாதயாத்திரை, சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பையொட்டி மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்து விநாயகர் கோயில்களில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டது.சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உள்ளூர்,வெளியூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடங்கள் எடுத்து அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் ஐந்து மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதே போல இரவு தங்கரத புறப்பாட்டை காணவும் பக்தர்கள் திரண்டனர்.

பக்தர்கள் அவதி:
ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள் வியாபாரிகளால் பாதவிநாயகர் கோயில், சன்னதிவீதி, வடக்குகிரி வீதியில் வியாபாரிகளின் தொந்தரவால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். கிரிவீதிகள், அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்துரோடு, பூங்காரோடு மற்றும் திருஆவினன்குடி கோயில் அருகே இருபுறங்களிலும் முறையில்லாமல் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போதியளவில் போலீசார் இல்லாததால் பக்தர்கள் கூட்டநெரிசலில் சிரமப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar