பதிவு செய்த நாள்
02
ஜன
2018
11:01
கிருஷ்ணராயபுரம்: புத்தாண்டை முன்னிட்டு, லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில், புதிய ரூபாய் நோட்டுகளால், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மக்கள் வழிபட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கடை வீதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று, அம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. 2,000 ரூபாய், 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வைத்து, சிறப்பான முறையில் அலங்காரம் செய்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.