Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருந்துறையில் 24ம் தேதி ஆஞ்சநேயர் ... கூடலூர் ஐயப்பன் கோயிலில் அலைமோதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை ஷீரடி சாயிபாபா கோயிலில் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2011
12:12

கழுகுமலை : கழுகுமலை அருகே ஷீரடி சாயிபாபா கோயிலில் வருடாந்திர மூன்றுநாள் திருவிழா நடந்தது. தமிழகத்தின் தென்பகுதியில் முதன்முறையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை குமாரபுரம் கிராமத்தில் ஷீரடி சாயிபாபா கோயில் எழுப்பப்பட்டது. அதுமுதல் அக்கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் பவுர்ணமி சிறப்பு பூஜையும், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் மூன்று நாட்கள் திருவிழாவும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு மூன்று நாட்கள் திருவிழா சாயிபாபா கோயில் துவாரக மாயி சந்நிதியில் நடந்தது. இதில் முதல் நாளன்று விநாயகர், ராகு மற்றும் கேது, மஹாலட்சுமி, பாபா மற்றும் அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தன. தொடர்ந்து ஓம்காரம், சுப்ரபாதம், பாபாவின் அஷ்டோத நாமவழி எனப்படும் 108 திருநாமங்கள் ஆகிய பஜனைகள் நடந்தன. மாலையில் சிறப்பு பூஜையும், மஹாமங்கள ஆரத்தியும் நடந்தன. இரண்டாம் நாளன்று அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் புனிதநீர் தெளித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து கழுகுமலையை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபாடுகள் செய்தனர். மாலையில் சிறப்பு பூஜையும், மஹாமங்கள ஆரத்தியும் நடந்தன. மூன்றாம் நாளன்று அனைத்து சுவாமிகளுக்கும் அனைத்து வகையான சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு 108 திருநாமங்கள் நடந்தன. மாலையில் சிறப்பு பூஜையும், மஹாமங்கள ஆரத்தியும் நடந்தது. தூத்துக்குடி சத்யசாய் சேவா சமிதி மாவட்ட தலைவர் செந்தில் கலந்து கொண்டு ஆன்மீகம் பற்றி பேசினார். பக்தர்களுக்கு மூன்றுவகையான பிரசாதங்களும், மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு பூஜைகளை சாயிபாபா கோயில் குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்தார். விழாவில் தூத்துக்குடி சத்யசாய் சேவா சமிதி கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன், கோவில்பட்டி கன்வீனர் ராமகிருஷ்ணன், ஷீரடி டிரஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினர் உக்கிரமபாண்டியன் உட்பட கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களிலிருந்து பல அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar