பதிவு செய்த நாள்
02
ஜன
2018
12:01
தேனி : ஆங்கிலப்புத்தாண்டையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை, சர்ச்களில் வழிபாடு நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், மதுரை ரோட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில், வரத ராஜ பெருமாள் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. என்.ஆர்.டி., நகரில் உள்ள சி.எஸ்.ஐ., பங்களாமேட்டில் உள்ள ஆர்.சி., சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியிருப்பதால் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். வேலப்பர் கோயில், கவுமாரியம்மன்கோயில், நந்தகோபாலன் கோயில், சாமாண்டியம்மன் கோயில்களில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. *ஏ.எம்.சர்ச் தெரு, காமயகவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள சர்ச்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடந்தது.ராயப்பன்பட்டி புனிதபனிமயமாதா சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமானோர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சுருளி அருவியில் மக்கள் வெள்ளம்: புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் சுருளி அருவியில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அருவியில் குளித்து விட்டு இங்குள்ள பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியது. சுவாமி- அம்பாளை ஏராளமானோர் தரிசித்தனர். அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆண்டிபட்டி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், பாலவிநாயகர் கோயில், ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், கல்கோயில், மேலப்பிள்ளையார் கோயில் உட்பட பல கோயில்களில் அதிகாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் புத்தாண்டு மற்றும் பவுர்ணமி பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சில்வார்பட்டி காளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வைகை அணை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது.
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், சிவன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. வரதராஜப்பெருமாள் கோயில் கம்பம்ரோடு காளியம்மன் கோயில், குருவப்ப பிள்ளையார் கோயில், கைலாசபட்டி, கைலாசநாதர் மலைக்கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயில், தாமரைக்குளம் மலைமேல் வெங்கிடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
சர்ச்சுகளில் திருப்பலி: தென்கரை புனித பத்திரீசியார் சர்ச்சில் புத்தாண்டு திருப்பலி பாதிரியார் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். * வடகரை கோட்டைமேடு சி.எஸ்.ஐ., சர்ச்சில் பாதிரியார் ஜெயராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது.
போடி: புத்தாண்டை முன்னிட்டு போடி சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூமிதேவியுடன் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
* போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
* கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் புத்தாண்டு மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* போடி கீழச்சொக்கநாதர் கோயிலில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், தென்திருவண்ணமலை என அழைக்கப்படும் பரமசிவன் மலைக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* போடி புதுார் சங்கடஹர விநாயகர், போடி அக்ரஹாரம் பாலவிநாயகர், சந்தைப்பேட்டை விநாயகர், ஐயப்பன் கோயிலில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* போடி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் உலக அமைதி வேண்டி கூட்டு வழிபாடு நடந்தது.
* தென்னிந்திய திருச்சபை சர்ச்சில் குடும்ப நன்மை, உலக அமைதிக்காக சிலுவை வழிபாடு பிரார்த்தனை நடந்தது.
* நள்ளிரவு 12 மணிக்கு மேல் புத்தாண்டை வரவேற்கும் வகையில், முந்தல் ரோட்டில் கிரீன் ராயல் ரிசார்ட்ஸ்சில் பட்டாசு வெடிக்கப்பட்டது. இனிப்புகள் வழங்கி, இன்னிசை கச்சேரியும் நடந்தது.