பதிவு செய்த நாள்
02
ஜன
2018
12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ தூரம் நடந்து சென்று கிரிவலம் செல்வர். அதன்படி, நேற்று காலை, 11:27 மணிக்கு பவுர்ணமி துவங்கியது. இன்று காலை, 9:09 வரை பவுர்ணமி உள்ளது. நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும், பவுர்ணமியை முன்னிட்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கோவில் கொடி மரம் அருகில் உள்ள சம்பந்த விநாயகருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. பக்தர்கள் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா, நேற்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.