பதிவு செய்த நாள்
02
ஜன
2018
05:01
சென்னை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சென்னை முத்தையால்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கோவில் நடராஜ மூர்த்திகளின் திருவாதிரை சந்திப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
வட சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகள், நடராஜர் அலங்காரத்தில் வீற்றெழுந்து, நவ நடராஜர்களாக சந்திக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், நடராஜரின் அருளை பெற்றனர். மண்ணடி, முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள , அனைத்து திருக்கோவில்களின் நடராஜ மூர்த்திகளின், நவ நடராஜர் சந்திப்பு நடந்தது. மல்லிகேஸ்வரர் கோவில் முன், நடந்த இந்நிகழ்ச்சியில், நடராஜர்களுக்கு நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது. ‘பக்தர்களின் கடல் வெள்ளத்தில் நடந்த இந்த நவ நடராஜர்கள்சந்திப்பு நிகழ்சி மெய்மறக்கச் செய்தது. தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனக் கூறி, பக்தர்கள் மலர்களை துாவி, இறை அருள் பெற்றனர்.