வாலாஜாபாத் : முத்தாலம்மன் கோவிலில், 35வது மாத பவுர்ணமி பூஜை கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத்தில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில், திரு விளக்கு பூஜை நடைபெறுகிறது. தனுர் மாத பவுர்ணமி பூஜை மற்றும் ஆங்கில புத்தாண்டு பூஜையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நேற்று மாலை, மகா பாரத சொற்பொழிவாளர் கிருபாகரன், முத்தாலம்மன் குறித்து, சொற்பொழிவு ஆற்றினார்.