Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதயாத்திரை சுகாதாரம் காக்க ஆயிரம் ... மாரியம்மன் தேர்த்திருவிழா மார்ச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகநாதர் கோவில் தேர் ஊர்வலம்! 6ம் தேதி போக்குவரத்து மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
01:01

கோவை:ஜெகநாதர் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு வரும், 6ம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை, ஜெகநாதர் கோவில், 26ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும், 6ம் தேதி மதியம் தேரோட்டம் நடக்க உள்ளது. இதையடுத்து, 6ம் தேதி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் மரக்கடை, என்.எச்., ரோடு, டவுன்ஹால் வழியாக உக்கடத்தை அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அல்லது பேரூர் பைபாஸ் வழியாக செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு, சுக்கரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் ரோட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக மரக்கடை, என்.எச்., ரோடு வழியாக உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பொள்ளாச்சி ரோட்டிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளுக்கு செல்லலாம். தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்ல வேண்டும். பேரூர் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை நகருக்குள் நுழைய லாரிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தேரோட்டம் நடக்கும் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, ஆர்.ஜி., வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., வீதிகளில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை தேர் வரும் ரோட்டில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar