Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பட்டி அய்யப்பன் கோயிலில் ... ஊஞ்சலூர் சேஷாத்ரி ஸ்வாமி ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணப்பதிவு அலுவலகம் திருமலையில் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2011
12:12

நகரி : திருமலையில், புதுமண தம்பதிகளுக்காக, திருமணப் பதிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. திருமலையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணப் பதிவு அலுவலகத்தை, மாநில பத்திரப் பதிவு அமைச்சர் நரசிம்மன், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். திருமலையில் திருமணம் செய்து கொண்ட மண மக்கள் சிலர், பதிவு அலுவலகத்திற்கு வந்திருந்து, தங்களின் திருமணத்தை, நேற்று பதிவு செய்து கொண்டனர். பதிவு அலுவலகத்தை திறந்து வைத்து, அமைச்சர் கூறியதாவது: திருமலையில், ஓராண்டில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணப் பதிவை, சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய, 008ம் ஆண்டில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெளிநாடுகளில் வாழும், இளம் வயது ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் புது மணமக்கள், ஓரிரு தினங்கள் முன்பாக, தகவல் தெரிவிக்க வேண்டும். பின், திருமணம் முடிந்த பின், பதிவு செய்து கொள்ளலாம். புதுமண மக்கள், தங்களின் திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம் போன்ற, அத்தாட்சிகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் அளித்து, பெற்றோர் அல்லது மூன்று பேரை சாட்சிகளாக காண்பித்து, 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் வசதி, முதல் கட்டமாக விசாகப்பட்டினத்தில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் நரசிம்மன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar