Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்குரு சங்கீத சமாஜ இசைவிழா துவக்கம் ராஜ அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர் உலா ராஜ அலங்காரத்தில் கோட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாற்றில் தியராஜருக்கு 171வது இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:
திருவையாற்றில் தியராஜருக்கு 171வது இசை அஞ்சலி

பதிவு செய்த நாள்

06 ஜன
2018
10:01

தஞ்சாவூர்:  திருவையாறு 171வது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, இன்று காலை நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்துக்கொண்டு, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள சத்குரு தியாகராஜர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. 171வது ஆண்டு ஆராதனை விழா, கடந்த 2ம் தேதி மாலை துவங்கியது. அன்று முதல் தினமும் இன்னிசை கச்சேரி, வாய்ப்பாட்டு நடந்து வருகிறது. இன்று ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனையொட்டி காலை திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள விழா பந்தலுக்கு வந்தனர். தியாராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பிறகு, மங்கள இசை துவங்கியது. சரியாக 9 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது.

தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த "ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக... என்ற பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொள ராகம், ஆதி தாளத்தில் அமைந்த "துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ... என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த "ஸாதிஞ்செநெ ஓ மநஸா... என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த "கனகன ருசி ரா கநகவஸந நிந்நு... என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த "எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு... ஆகிய பாடல்களை ஆயிரத்திற்கு மேற்பட்ட கலைஞர்கள் ஒருமித்து பாடி இசைஅஞ்சலி செலுத்தினர்.
இதில், சுதாராகுநாதன்,மஹதி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்றனர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும். நாதஸ்வர கச்சேரி, பின்னர் உபன்யாசம் நடந்தது. இரவு 8 மணிக்கு மல்லாரியுடன் வீதி உலா நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
தஞ்சை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் நுழைவாயில் அருகே மூவர்ண விளக்குகளால் ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ... மேலும்
 
temple news
கர்நாடகா:  மைசூர், கர்நாடகா: தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகள் மைசூர் அரண்மனையில் பாரம்பரியமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar