Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊஞ்சலூர் சேஷாத்ரி ஸ்வாமி ஆராதனை ... ஏழரை சனி பிடித்தால் கவலைப்படாதீர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் விரதத்தை முடித்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2011
12:12

கடையநல்லூர் : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முல்லைப் பெரியாறு பிரச்னையை அடுத்து சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்து நெய் அபிஷேகம் செய்து ஊருக்கு திரும்பினர். இக்கோயிலுக்கு நேற்று 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வருகை தந்திருந்தனர். கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரையில் சுவாமி ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவழிபாட்டில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு பக்தர்களும் தனது, தாய், தந்தை, மனைவி மக்களோடு 18 திருப்படிகள் ஏறிச் சென்று கருவறையில் அமர்ந்து அருள்புரியும் சுவாமியை வழிபடும் வகையில் உள்ளது. பெற்றோர்கள் தங்களது 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய வைத்து வணங்குவது இக்கோயிலின் சிறப்பாகும். மாலை அணிந்த குருசாமிகள் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பு அன்றும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபட செல்லும் பக்தர்கள் வரும் காலங்களிலும் அதிகளவில் வருவதுண்டு. இதனிடையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் காரணமாக தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பெருமளவில் ஆங்காங்கே பிரச்னைகளுக்கு ஆளாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கேரள எல்கை பகுதிகளில் பெருமளவில் பதட்டமாக காணப்பட்டு வருவதால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வந்தது. இதனிடையில் நேற்று புளியரை செங்கோட்டை பகுதியில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சாலை மறியல் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில் கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வரத் துவங்கினர்.நேற்று காலை 9 மணி முதல் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் பூஜை செய்வதை போன்றே பூஜைகள் செய்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்துவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பி சென்றதை பரவலாக காணமுடிந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 18 படிகளுக்கு பூஜை செய்து, நெய் அபிஷேக வழிபாடு செய்து சென்றதால் சாம்பவர்வடகரை பகுதியில் ஏராளமான வாகனங்கள் சாரை, சாரையாக செங்கோட்டை, கோவிலாண்டனூர் வரை ஏராளமான வாகனங்கள் நின்றதை காண முடிந்தது.சபரிமலை ஐயப்பனை போன்றே சாம்பவர்வடகரை கோயிலும் பிரசித்தி பெற்று வருவதால் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar