நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இறைவனால் நியமிக்கப்பட்ட ஒருவர் உடனடியாக பதிந்து கொள்கிறார். நம் இறப்புக்குப் பின் “இவர் இன்ன வார்த்தையைப் பேசினார்,” என்று இறைவனிடம் அவர் சொல்வார். அது நல்ல வார்த்தையாக இருந்தால், நாம் பலனடைவோம். மோசமானதும், தேவையற்றதும், பலனற்றதுமாக இருந்தால், இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம்.