நமக்கு நாக்கு படைக்கப்பட்டிருப்பது சாப்பாட்டை ருசிக்க மட்டுமல்ல. பேச்சில் கவனம் செலுத்தவும் தான்!
இதோ பேச்சுக்கான கட்டளைகள்: ● தேவையிருந்தால் மட்டும் பேசுங்கள். ● நன்மை தரும் பேச்சை மட்டும் பேசுங்கள். ● மலர்ந்த முகத்துடன் கண்ணியமாக பேசுங்கள் ● மென்மையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். ● மற்றவர் கேட்க முடியாத அளவுக்கு தாழ்ந்த குரலில் பேசாதீர்கள் ● பிறர் பயப்படும்படி உரக்கவும் பேசாதீர்கள் ● பிறர் மனம் வலிக்கும்படி பேசாதீர்கள் ● நீதி தவறாமல் பேசுங்கள் ● தீய பேச்சால் நாக்கை கறைப் படுத்தாதீர்கள் ● பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள் ● உங்கள் நாக்கு கோள் சொல்லக் கூடாது ● பிறரை கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள் ● பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள் ● யாருக்கும் பட்டப்பெயர் வைக்காதீர்கள்