Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் முருக பெருமான் ... ஆலமரத்தில் அம்மன் உருவம்? பொது மக்கள் வழிபாடு ஆலமரத்தில் அம்மன் உருவம்? பொது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை: வீரராகவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தை அமாவாசை: வீரராகவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
12:01

திருவள்ளூர்: தை அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனர்.திருவள்ளூர், வீரராகவர் கோவில், 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று. ஒவ்வொரு அமாவாசையன்றும், கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால், தை அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து வீரராகவரை வழிபடுகின்றனர். இந்த ஆண்டின் தை அமாவாசையான நேற்று, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், முதல் நாளே திருவள்ளூர் வந்தனர். நேற்று அதிகாலை, கோவில் குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.

ரத்னாங்கி சேவை: தை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று, உற்சவர் ரத்னாங்கி சேவையில், காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, அருள்பாலித்தார். பின்னர், நேற்று மாலை , 4:00மணிக்கு, சேஷ வாகனத்திலும், இரவு, 10:00 மணிக்கு, சந்திரபிரபையிலும் உற்சவர் வீதி வலம் வந்தார். சாலிஹோத்திரமகரிஷிக்கு வீரராகவர் காட்சியளித்த நன்னாள் தை அமாவாசை என்பதால், நேற்று, பெருமாளை வணங்க ஏராளமானோர் குவிந்தனர். மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில், பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar