Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ... முன்னோரை வழிபடும் நடுகல் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போர்க்களக்காட்சியை விளக்கும் கி.பி., 17ம் நூற்றாண்டு நடுகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
02:01

பனமரத்துப்பட்டி: சேலம் அருகே, எதிரி படையை எதிர்த்து போரிடும் வீரத்துக்கு சான்றாக, போர்க்களக்காட்சியை விளக்கும் நடுகல் உள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டியில், கோட்டைக்கரடு அருகே, விவசாய தோட்டத்தில், போர்க்களக்காட்சியை விளக்கும் நடுகல் உள்ளது. அங்கு வசிக்கும் குமார், 35, சரவணக்குமார், 31, ஆகியோர், அதை, கடவுள் போல் பாவித்து, பூஜை செய்து வழிபட்டு பாதுகாக்கின்றனர். அது, நம் பண்பாடு, கலை, வீரம், உள்ளூர் வரலாறு ஆகியவற்றை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. கோட்டைக்கரடு, பழங்காலத்தில் அரசர்களின் ஆயுத கிடங்காகவும், அதன் மீது இருந்து, சுற்றுவட்டாரத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணித்ததாக செய்திகள் உள்ளன.

இதுகுறித்து, நடுகல் ஆய்வாளர், சேலம், சந்தியூர் கோவிந்தன் கூறியதாவது: கி.பி., 17ம், நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல், இரு நிலைகளை கொண்டுள்ளன. மேற்புற சிற்பத்தில், போர்க்களத்தில் அரசன் குதிரையில் அமர்ந்தபடி, எதிரே வரும் அம்புகளை தடுத்து, முன்னேறிச்செல்வது போல் உள்ளது. வால் மற்றும் முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு, குதிரை வேகமாக சீறிப்பாய்வதை போலவும், அருகே ஒரு சேவகன், அரசருக்கு குடைபிடித்து செல்வதை போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கீழ்புற சிற்பத்தில், வீரன் வில்லிலிருந்து, நாணை இழுத்து, அம்பு எய்வது போலவும், எதிராளியிடமிருந்து புறப்பட்ட ஏராளமான அம்புகள், வீரனை குத்த வருவது போலவும் உள்ளது. இக்காட்சி, படைகள் நிரம்பிய போர்க்களக்காட்சியை நினைவுபடுத்துகிறது. இறுதி கட்ட சண்டையில், நிறைய அம்புகள் குத்திய வீரன், வீரமரணமடைந்ததை அறிய முடிகிறது. வீரத்துக்கு சான்றாக, நடுகல் விளங்குகிறது. இதில், சிற்பத்தில் உள்ள வீரன், போர்படை தளபதியாகவோ, சிற்றரசனாகவோ இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே, சேவகர்கள் குடைபிடித்தபடி செல்வது வழக்கம். சேலம், நாமக்கல் மாவட்டங்களில், புலியை குத்துவது போலவும், வில் அம்புடன் நிற்பது, காட்டுப்பன்றியுடன் போரிடுவது என, பலவகை நடுகற்கள் கிடைத்துள்ளன. ஆனால், போர்க்களக்காட்சி, அம்புகள் நிறைய பறந்து வந்து, வீரனின் உடம்பில் பாய்வது போல், இங்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar