Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூர் கோவில்களில் சனிப்பெயர்ச்சி ... காந்தமலை பாலதண்டாயுதபாணி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்களிடம் கட்டாய வசூல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2011
12:12

ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு, பொது நலச்சங்கம் வளர்ச்சி நிதி என, கட்டணம் வசூல் செய்வதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையின் கோட்டை பகுதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காயநிர்மலேஸ்வரர், பிரசன் வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் கெட்டிமுதலி கோட்டையும் உள்ளன. காயநிர்மலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியில் பைரவர் பூஜை, பிரதோஷம், திருக்கல்யாணம், ஏகாதசி, சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதையொட்டி, ஆத்தூர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனம், செருப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க, ஹிந்து அறநிலையத்துறை மற்றும் ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று சனிப்பெயர்ச்சியொட்டி ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர். அவர்களிடம், 5 ரூபாய் ரசீது கொடுத்து, கட்டாய வசூல் வேட்டை நடத்தினர். அதில், கோவில் கோபுரத்துடன், ஆத்தூர் கோட்டை பொது நலச்சங்கம், கோட்டை வளர்ச்சி நிதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, வசூலிப்பர் பெயர், அனுமதி விபரம் எதுவும் இல்லை. கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து பக்தர்கள் கேட்டால், வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று, ரசீது கொடுக்கும் நபர்கள் விரட்டியடிக்கின்றனர். இதுப்பற்றி ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சங்கர் கூறுகையில், ""கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு, கட்டணம் வசூல் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொது நலச்சங்கம் பெயரில் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸில் புகார் செய்யப்படும், என்று கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar