Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் ... திருப்பூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம் திருப்பூர் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனக்குறை போக்கும் கோதவாடி மாரியம்மன்
எழுத்தின் அளவு:
மனக்குறை போக்கும் கோதவாடி மாரியம்மன்

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
12:01

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவில், 1922ம் ஆண்டில், செல்வாக்குமிக்கவராக இருந்த அகத்தியப்பர், ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் கோதவாடி மாரியம்மன் கோவிலை கட்டினார். செட்டிக்காபாளையம் செல்லும் ரோட்டில் வடக்கு திசைநோக்கி அமைந்துள்ள கோவிலின் உள்பகுதியில், சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட கல்துாண்கள், கருங்கற்கலால் அடுக்கப்பட்ட மேற்கூரை கோவிலின் பழமையை பறைசாற்றுகிறது.கோவிலை சுற்றிலும் ஆளுயர சுற்றுச்சுவர், கோவிலுக்கு வெளியே அம்மனுக்கு நேர் எதிரே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலினுள், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்துக்குள் வலது மூலையில் தீர்த்தக்கிணறும், நேர் எதிரே சிம்மவாகனமும் அமைந்துள்ளது. வில்வமரம் தலைவிருட்சமாக உள்ளது.ஆரம்ப காலத்தில் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை மூலவரை பொதுமக்கள் வணங்கி வந்தனர். கோவில் கும்பாபிேஷகத்தின் போது, மாரியம்மனுக்கு சிலை வடித்து, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நுாற்றாண்டு கண்ட இக்கோவிலின் முன்பகுதியில் ஓடு வேய்ந்த மண்டபம் அமைந்துள்ளது. தினமும் காலையில் பால் அபிஷேகம், மதியம் அமுது, மாலையில் சர்க்கரை, பழம் வைத்தும் பூஜை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும், வைகாசி மாதங்களில் வெகு விமர்சையாக கோவில் திருவிழா நடந்து வந்தது. கடந்த, 30 ஆண்டுகளாக திருவிழா நடக்காதது பக்தர்களுக்கு மனக்குறையாக உள்ளது. அதனால், கோவில் வளாகம் களையிழந்து காணப்படுகிறது.கிராமத்தில் நடக்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும், கிராம மக்களின் குடும்ப நிகழ்வாக இருந்தாலும், கோவிலில் அம்மனை வழிபட்டு துவங்குகின்றனர். விவசாயம் செழிக்கவும், கால்நடை பெருகவும், தொழில் முன்னேற்றத்துக்கும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபடுகின்றனர். பக்தர்களின் மனக்குறையை போக்கி அருள்புரியும், கோதவாடி மாரியம்மனை கையெடுத்து வணங்காதவர்கள் இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar