பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
காஞ்சிபுரம் : திருப்புட்குழி, விஜயராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியில், வைணவ தலங்களில் சிறப்பு பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை, 9:45 மணிக்கு, வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக, 19ம் தேதி முதல், சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, ஐந்தாம் கால பூஜை நிறைவு பெற்று, மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டு சென்றனர்.