Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதீனம் ... முக்கால் நூற்றாண்டுக்கு பின் துவங்கிய தேரோட்டம்...தொடருமா? முக்கால் நூற்றாண்டுக்கு பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய திருத்தேரில் விரிசல்
எழுத்தின் அளவு:
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய திருத்தேரில் விரிசல்

பதிவு செய்த நாள்

25 ஜன
2018
12:01

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேரில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பயன்பாட்டில் இருந்த தேர் பழுதடைந்தது. பின்னர், 45 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் செய்ய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தேர் செய்யப்பட்டது. பணி நிறைவு பெற்று, கடந்த, 22ல் வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது, தேரடி வீதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேரில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் செய்வதற்கு, தரமான மரம் பயன்படுத்தப்படவில்லை. இதனால், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தமிழரசு கூறியதாவது: தேர் செய்வதற்கு, தரமான மரம் பயன்படுத்தப்பட்டது. தேர், 30 டன் எடை கொண்டது. தற்போது ஒரு இடத்தில் மட்டுமே, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளோட்டம் விடும் போது, சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. அதில் இறங்கிய போது, பக்தர்களால் இழுக்க முடியவில்லை. எனவே, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இழுக்கப்பட்டது. அதனால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று சரிசெய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar