பெருநகர் : பெருநகர், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்ம புரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, ரதோற்சவ நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மலர் அலங்காரத்தில் தேரில் அமர்ந்து, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, தேரின் வடம் பிடித்த பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக இழுத்தனர். இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பலர் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.