பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
உத்தமசோழபுரம்: சேலம் அருகே, உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலில், சிவனுக்கு மிகவும் உகந்த திங்கட்கிழமை (சோமவாரம்), திரியோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் என, மூன்று முக்கிய விஷேசங்களும் ஒரே நாளில் வருவது அபூர்வமான ஒரு நிகழ்வு, ஒவ்வொருவரின் வாழ்நாளிலும், ஒருமுறை மட்டுமே வரும் என்பதால், நேற்றைய பிரதோஷத்தில் கரபுரநாதரை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். முன்னதாக, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய, உமாமகேஸ்வரி சமேத கரபுரநாதரை, கூடியிருந்த பக்தர்கள் தோளில் சுமந்து கோவிலை வலம் வந்தனர்.
* ஓமலூர், காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் சிவனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, நந்திக்கு பாலாபி?ஷம், அலங்காரம் செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், கோட்டை வசந்தீஸ்வரர் ஆலயம், அக்ரஹாரம் வைதீஸ்வரன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
* சேலம், சுகவேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு நத்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுகவனேஸ்வரர் சுவாமி, சொர்ணாம்பிகை அம்மனுக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. பின்னர், சுவாமி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில், இரண்டாவது அக்ர ஹாரத்தில் உள்ள காசி விஸ்வ நாதர் கோவில், குகை அம்பலவாணர் சுவாமி கோவில், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி சுந்தரரேஸ்வரர்கோவில், மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், நேற்று பிரதோஷம் விழா கோலாகலமாக நடந்தது.
* ஆத்தூரில், பிரசித்தி பெற்ற காயநிர்மலேஸ்வரர் கோவிலில், மூலவர் காயநிர்மலேஸ்வரர், நந்தி சிலைகளுக்கு, மஞ்சள், சந்தனம், தேன், பால் போன்றவை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின், காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், நந்தி சுவாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாச நாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜைகள் நடந்தன. சோமவாரம் எனும் திங்கட் கிழமையில், திரயோதசி திதி, திருவாதிரை ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் சேர்ந்து வரும் அபூர்வ பிரதோஷம் என்பதால், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.