கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2018 11:01
போடி, 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மட்டுமே சிவனுக்கு உகந்த நாள், நட்சத்திரம், திதி ஆகியவை ஒரேநாளில் வந்ததை முன்னிட்டுநேற்று நடந்த பிரதோஷத்தையொட்டி, போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சிவனை தரிசித்தனர். போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் கோயில் வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.