மதுரை மீனாட்சி கோயிலில் தீ: மடிந்த புறாக்கள் கதறித்துடித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2018 12:02
மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் ஏற்பட்ட தீயால் ஏராளமான புறாக்கள் கருகி பலியாகின. பக்தர்கள் கதறித்துடித்து கண்ணீர் சிந்தினர். கோயிலுக்குள் கடைகளை அனுமதிக்க கூடாது என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அம்மன் சன்னதியில் 40, சுவாமி சன்னதியில் 125 என ஏராளமான கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
ஆயிரம் கால் மண்டம் அருகே ஒரு புறம் பற்றிய தீ எதிர்ப்புற கடைகளுக்கும் பரவியது. கடைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் பரவிய தீ விஸ்வரூபம் எடுத்தது. விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பந்தல் பொருட்கள் பழைய திருக்கல்யான மண்டம் அருகே அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் தீப்பிடித்து மேற்கூரை பூச்சு சரிந்து விழுந்தது. தீப்பிடித்த கடைகளில் இருந்த கல்துாண் ஒன்றும் சரிந்தது. பல இடங்களில் சுவர், மேற்கூரை பூச்சுக்கள் பெயர்ந்தன. பழங்கால சிற்பங்கள் கருகி சேதம் அடைந்தன. ஓவியங்களும் சிதைந்தன. ராஜகோபுர பகுதியில் இருந்த நந்தி சிலையும் சேதம் அடைந்தது. கோயிலில் தஞ்சம் அடைந்திருந்த ஏராளமான புறாக்கள் கருகி மடிந்தன. இதைக் கண்ட பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.