பதிவு செய்த நாள்
06
பிப்
2018
12:02
மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்திற்கு, கடை முன் தேங்காயில் சூடம் ஏற்றி எறிந்ததுதான் காரணமா என, கடை உரிமையாளர், ஊழியரிடம் விசாரணை நடக்கிறது. இக்கோவில் கடைகளில், பிப்.,2 இரவு, தீப்பிடித்தது. இதில், 30க்கும் மேற்பட்ட கடைகள் கருகின. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணம் என தெரியவந்தது. அதே சமயம், வேறு காரணங்கள் உண்டா என்ற விசாரணையும், நடந்து வருகிறது. கடை எண், 75ல்தான், முதன்முதலாக தீப்பிடித்து, புகை கிளம்பியுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, கடை ஊழியர் ஒருவர், தேங்காயில் சூடம் ஏற்றி, ’திருஷ்டி’ கழித்தது, உடைத்தது தெரியவந்தது. இதனால்கூட தீ பரவி இருக்கலாமா என்ற கோணத்தில், கடை உரிமையாளர், ஊழியரிடம், போலீசார் விசாரிக் கின்றனர்.