மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தையடுத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று அம்மன் சன்னதியில் 20 க்கும் மேற்பட்ட பூக்கடைகளை திறக்க கோயில் நிர்வாகம் அனுமதித்தது.இக்கோயில் வீர வசந்தராய மண்டபத்தில் பிப்.,2 இரவு 10:15 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மண்டபம் இடிந்து விழுந்தது. 50க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் சாம்பலாகின. கோயிலுக்குள் செயல்பட்ட கடைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அம்மன் சன்னதி பகுதியில் மட்டுமாவது கடைகளை திறக்க அனுமதிக்க கோயில் நிர்வாகத்திடம் கடைக்காரர்கள் கோரினர். எனினும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் அனுமதியின் பேரில் அம்மன் சன்னதியில் 20க்கும் மேற்பட்ட பூக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.