பழநி கோயில் ஜனவரி வசூல் ரூ.17.5 கோடி : கடந்தாண்டைவிட ரூ.4.5 கோடி அதிகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2018 12:02
பழநி: தைப்பூசவிழா எதிரொலியாக, பழநி முருகன்கோயிலில் கடந்த ஜனவரியில் மட்டும் பஞ்சாமிர்தம், தரிசனம், ரோப்கார், வின்ச், உண்டியல் உள்ளிட்டவை மூலம் ரூ.17 கோடியே 57லட்சத்து 69ஆயிரம் வசூலாகியுள்ளது.
இது 2017 ஜனவரியை விட ரூ.4.5 கோடி அதிகம்.தைப்பூச விழா நாட்களான ஜன.,25 முதல் பிப்.,3வரை மட்டும் ரூ.7 கோடியே 67 லட்சத்து 65ஆயிரம் வசூலாகியுள்ளது.இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2017ம் ஜனவரி ஒருமாதம் ரூ.13 கோடி 2 லட்சத்து 63 ஆயிரம் வசூலானது. இந்தாண்டு அதைவிட ரூ. 4.55 கோடி அதிகம். இதேபோல 2017 தைப்பூசவிழா நாட்களில் ரூ.6 கோடியே 15 லட்சத்து 78 ஆயிரம் வசூலானது. இந்தாண்டு தைப்பூசத்தில் ரூ.1 கோடியே 51 லட்சம் 86 ஆயிரம் கூடுதலாக கிடைத்துள்ளது, என்றார்.