Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிந்தலவாடி மாரியம்மனுக்கு ரூபாய் ... கோவில் பாதுகாப்புக்கு ஆய்வு குழு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.30 லட்சத்திற்கு இரும்பு கர்டர்கள்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.30 லட்சத்திற்கு இரும்பு கர்டர்கள்

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
01:02

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில், தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி, 30 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.இம்மண்டபத்தில், 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது.

மண்டபத்தையொட்டி உள்ள ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை, ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றியுள்ள மண்டபங்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இரும்பு கர்டர்களை வைத்து முட்டுக்கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கோவில் நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது.கோவில் பாதுகாப்பு குறித்து, சென்னையில் நேற்று அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இதற்கிடையே, 3ம் தேதி முதல் நேற்று வரை, அம்மனுக்கும், சுவாமிக்கும் தினமும் பரிகார பூஜை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும், 6ல் வீரவசந்தராயர் மண்டப பகுதியில், மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் அறையில், சிறிய தீ விபத்து ஏற்பட்டது.தொடர்ந்து அடுத்தடுத்து அசம்பாவிதம் நடந்து வருவது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை பரிகார பூர்த்தி பூஜை செய்யப்பட்டு, அம்மன், சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar