பதிவு செய்த நாள்
12
பிப்
2018
12:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூரில் உள்ள கருமலை கந்தவேலர் கோவில் கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 8 காலை பெரியமுத்தூரில் கிராம தேவதை வழிபாடு நடந்தது. 9 காலை, தென்பெண்ணை ஆற்றில் இருந்து கங்கை தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கொண்டுவருதல் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு விளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடு நடந்தது.
பின், காப்பணிதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம், 9:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வியும் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு, நான்காம் கால வழிபாடும், 8:45 மணிக்கு, விநாயகர், சிவபெருமான், திருமால், திரவுபதியம்மன் மற்றும் ஒன்பான் கோள்கள் திருக்குட நன்னீராட்டும், 9:30 மணிக்கு, கருமலைக் கந்தவேல் கும்பாபி?ஷகமும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு திருக்குட நன்னீராட்டும், பெருந்திருமஞ்சனமும் நடந்தது. இதையொட்டி, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள் மற்றும் கருமலை கந்தவேலன் ஆலய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.