Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியங்காவில் புஷ்கலாதேவி திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 டிச
2011
12:12

ஆரியங்காவு: ஆரியங்காவில் தர்மசாஸ்தா- புஷ்கலாதேவி திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. கேரள மாநிலம் ஆரியங்காவில் தர்மசாஸ்தா- புஷ்கலாதேவிக்கு திருக்கல்யாண உற்சவம் சவுராஷ்டிர சமூகத்தினர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. ஆரியங்காவு ராஜகொட்டாரத்தில் நேற்று முன்தினம் பாண்டியன் முடிப்பு என்ற நிச்சயதார்த்த சடங்கு நடந்தது. தொடர்ந்து நேற்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் நலுங்கு வைபவம் எனும் "ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தெய்வங்களுக்கு புதிய ஆடைகள் சாத்தப்பட்டன. மாலையில் கோவில் வளாகத்தினுள்ள ஐயனும் காளை வாகனத்திலும், அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளினர். அம்பாள் சப்பரம், சுவாமி சப்பரத்தை மூன்று முறை வலம் வந்தது. மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின் இரு சப்பரங்களும் ஒன்றாக வலம் வந்தன. திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ சடங்குகள் நடந்தது. பகவானும், அம்பாளும் சர்வ அலங்கார மணக்கோலத்தில் காட்சியளித்தனர். தேவஸ்வம் சார்பில் த ங்கத்தாலி வர, திருமாங்கல்ய பூஜைக்கு பின் சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். அம்பாள் சார்பில் சவுராஷ்டிரா மக்களும், சுவாமி சார்பில் தேவஸ்வம் அதிகாரிகளும், கேரள, தமிழக பக்தர்களும் பங்கேற்றனர். தேவஸ்வம் போர்டு சார்பில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும், தேவஸ்வம் சார்பில் மூன்று நாட்கள் சம்பந்தி விருந்தும் வழங்கப்பட்டது. புஷ்கலா தேவி சவுராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சவுராஷ்டிரா சமூக முறைப்படி திருமண நிகழ்ச்சிகள் நடந்தது. சடங்குகளை புளியரை ஸ்ரீதரன் செய்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தாம்புலம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிர சங்க தலைவர் டி.கே.சுப்ரமணியன், செயலாளர் எஸ்.ஜே.ராஜன்,, மற்றும் நிர்வாகிகள் மோகன்,கண்ணன் உட்பட பலரும், பகவான் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar