Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனுமன் ஜெயந்தி தரிசன டிக்கெட் ரூ. ஒரு ... சபரிமலையில் தமிழக பக்தர்கள் வரவு குறைந்தது: தேவசம்போர்டு! சபரிமலையில் தமிழக பக்தர்கள் வரவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகிரி முருகன் கோவில் மலைப்பாதையில் விரைவில் போக்குவரத்து துவங்கும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2011
12:12

சேலம் : சேலம், குமரகிரி முருகன் கோவில் மலைப்பாதை பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சேலம், அம்மாபேட்டை அருகே குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் மலைமேல் அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டு வசதி உள்ளது. பக்தர்கள் வசதிக்காக, மலைப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போத நிறைவடையும் தருவாயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பதால், பக்தர்கள் தங்குவதற்கு கோவிலில் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு பெரிய ஹால் வசதி உள்ளது. குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில் மலைப்பாதை அமைப்பதற்காக, கோவில் நற்பணி மன்றத்தின் சார்பில், கடந்த 27.8.2000ம் ஆண்டு பணிகள் துவங்கியது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 2009-10ம் ஆண்டு, 84 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய், குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் நற்பணி மன்றத்தின் சார்பில், 28 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 7,000 ரூபாய் செலவில் மலை பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் குறித்து, மலைப்பாதை திருப்பணிக்குழு தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: மலையை சுற்றி, தார் ரோடு அமைக்கும் பணிக்கான துவக்க விழா, கடந்த 2000ல் அப்போதைய அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்குடிமகன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. கீழே இருந்து மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல, இரண்டே கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் ரோடு போடப்பட்டுள்ளது. கோவில் அருகே, 50 அடி தூரத்துக்கு முதியவர்கள் நடந்து செல்லும் வகையில், சாய்வுதளம் அமைக்கும் பணி நடக்கவுள்ளது. மலைப்பாதை ஓரம் "ரிப்ளக்டர் அமைக்கப்பட்டுள்ளன. 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar