Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமரகிரி முருகன் கோவில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தமிழக பக்தர்கள் வரவு குறைந்தது: தேவசம்போர்டு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 டிச
2011
01:12

சபரிமலை: சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை கணிசமான அளவு குறைந்துள்ளது எனினும் வருமானத்தில் குறைவு ஏற்படவில்லை என்று தேவசம்போர்டு தலைவர் அட்வகேட் ராஜகோபாலன் நாயர் கூறினார். சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு வார காலமாக சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது, எனினும் சபரிமலை வருமானத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 19 கோடியே 88 லட்சம் ரூபாய் அதிக வருமானம் வந்துள்ளது. மண்டல காலத்தில் 39 நாட்களில் மொத்த வருமானம் 114 கோடியே 64 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு வருமானம் இதே கால அளவில் 94 கோடியே 78 லட்சம் ரூபாயாக இருந்தது. நெய்யபிஷேக டிக்கெட்டுகள் ஒரு கோடியே 47 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. அரவணை விற்பனையில் 48 கோடியே 97 லட்சம் ரூபாயும், அப்பம் விற்பனையில் ஒன்பது கோடியே 76 லட்சம் ரூபாயும், காணிக்கையாக 41 கோடியே 58 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த வாரம் சில அரவணை டின்கள் உடைந்து ஒழுகிய சம்பவம் பற்றி தேவசம்போர்டு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தர பரிசோதனையும், ஆய்வக சோதனையும் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது எஸ்.பி. ரேங்கில் ஒரு அதிகாரியின் கண்காணிப்பில் பிரசாசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இனி ஒரு சம்பவம் இது போல் நடைபெறாமல் இருக்க போர்டு கவனமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar