பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
செக்கானுாரணி, மகாசிவராத்திரியை முன்னிட்டு கருமாத்துார், செக்கானுாரணி பகுதி கோயில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் குவிந்தனர். கருமாத்துார் காசிவிஸ்வநாதர் கோயில், விருமாண்டி, பேச்சியம்மன், கோட்டைமந்தை கொத்தாள கருப்பசாமி, கடசாரி நல்லகுரும்பய்யர், ஒச்சாண்டம்மன், காக்குவீரன் கோயில்கள், பி.மீனாட்சிபட்டி மத்தியஸ்து கருப்பசாமி, செக்கானுாரணி அடுத்து ஆதிசிவன், பேக்காமன் கருப்பசாமி, காமாட்சியம்மன் கோயில்களில் மகாசிவராத்திரி விழா களை கட்டும். நேற்று அதிகாலை முதல் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை கீழக்குயில்குடியில் இருந்து செக்கானுாரணி வழியாக சாமியாடிகள், பொது மக்கள் நடந்து சென்று காசிவிஸ்வநாதர் கோயிலில் வழிபட்டனர். இரவு பன்னியானில் இருந்து கண்ணனுார் வழியாக பொங்கல் பானைகளுடன் சாமியாடியவாறு சென்று காசிவிஸ்வநாதர் கோயிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.